உம்பாதம்
பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி
யாரைப் பாடுவேன் – ஏசைய்யா
உந்தன்
அன்பு உள்ளம் பொங்குதே
1. பரிசுத்தமே
பரவசமே
பரனே
அருளே வரம் பொருளே
தேடினதால்
கண்டடைந்தேன்
பாடிட
பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
2. நெருக்கத்திலே
உம்மை அழைத்தேன்
நெருங்கி
உதவி எனக்களித்தீர்
திசைகெட்டெங்கும்
அலைந்திடாமல்
தீவிரம்
வந்தென்னை தாங்குகின்றீர் - உம்பாதம்
3. என்
முன் செல்லும் உம் சமுகம்
எனக்கு
அளிக்கும் இளைப்பாறுதல்
உமது
கோலும் உம் தடியும்
உண்மையாய்
என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
4. என்
இதய தெய்வமே நீர்
எனது
இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன்
இயேசுவே உம்
நேசமுகம்
என்று கண்டிடுவேன் – உம்பாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக