திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம் (2)
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே – ஆ…ஆ…
1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் – ஆ (2)
2. உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம்
வரை உடன் சுதந்தரராய் இருக்க
கிருபையின் மகா தானமது
வருங்காலங்களில் விளங்க - ஆ
3. ஜீவனைத் தியாகமாய் வைத்த பலர்
கடும் சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் - ஆ
4. மரணத்தை நீக்கியே ஜீவனை
அருளிய மா பெரும் கிருபை
மா நிலத்தோர்க் கீந்தாரேசு
சுவிசேஷ ஒளியால் - ஆ
5. அழைக்கப்பட்டோரே நீர் உன்னத
அழைப்பினை அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் – ஆ

கருத்துகள் இல்லை: