திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே


நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே..ஆ!ஆ!
1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
சூழ்ந்திடும் தென்றல் நீள்மரங்கள்
தூயநல் தேன்மலர் தீங்கனிகள்-
2. இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்-
3. உறவினில் மகிழ்ந்திட நல்நண்பர்
உதவிகள் செய்திட பல்பணியர்
அறவழி காட்டிட அருள் பணியர்
அன்புடன் ஏற்றிட ஆண்டவர்-
4. உருவுடன் விளங்கிட ஓருடலம்
உடலதில் இறைவனுக்கோர் இதயம்
பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழியா
திருமறை பேசிடும் வானுலகம்.

கருத்துகள் இல்லை: