1. எந்தன்
உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப்
பாடிடுவேன்
அவர்
நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே
நேசிக்கிறேன்.(2)
அல்லேலூயா
துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம்
இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை
கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக்
கொண்டாடுவேன்.
2. சென்ற
காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும்
அணுகாமல்
சொந்தமாக
ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
சுக
பெலன் அளித்தாரே - அல்லேலுயா
3. சிலவேளை
இமைப் பொழுதே தம்முகத்தை
சிருஷ்டிகர்
மறைத்தாரே
கடும்
கோபம் நீக்கித் திரும்பவும் என்மேல்
கிருபையும்
பொழிந்தாரே - அல்லேலூயா
4. பஞ்சக்காலம்
பெருகிட நேர்ந்தாலும் - தாம்
தஞ்சமே
ஆனாரே
அங்கும்
இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம்
அளித்தாரே - அல்லேலூயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக