திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - எந்தன் கன்மலையானவரே


1. எந்தன் கன்மலையானவரே
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே – ஆராதனை உமக்கே (4)
2. உம் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே - ஆராதனை
3. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா எம் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே
4. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்

கருத்துகள் இல்லை: