தந்தானைத்
துதிப்போமே;-திருச்
சபையாரே,
கவி – பாடிப்பாடி
விந்தையாய்
நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர்
நன்மை மிக மிகத்
1. ஒய்யாரத்துச்
சீயோனே, - நீயும்
மெய்யாக
களிகூர்ந்து நேர்ந்து
ஐயனெசுக்குனின்
கையைக் கூப்பித் துதி
செய்குவையே,
மகிழ் கொள்ளுவையே, நாமும்
2. கண்ணாரக்
களித்தாயே, - நன்மைக்
காட்சியைக்
கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத
எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற்
சோனா மாரிபோற் பெய்துமே
3. சுத்தாங்கத்து
நற்சபையே, - உனை
முற்றாய்க்
கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக்
குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச்
சிந்தி எடுத்தே உயிர் வரம்
4. தூரம்திரிந்த
சியோனே, - உனைத்
தூக்கியெடுத்துக்
கரத்திலேந்தி,
ஆரங்கள்
பூட்டி அலங்கரித்து நினை
அத்தன்
மணவாட்டியாக்கினது என்னை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக