திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - தந்தானைத் துதிப்போமே;-திருச்


தந்தானைத் துதிப்போமே;-திருச்
சபையாரே, கவி – பாடிப்பாடி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்
1. ஒய்யாரத்துச் சீயோனே, - நீயும்
மெய்யாக களிகூர்ந்து நேர்ந்து
ஐயனெசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும்
2. கண்ணாரக் களித்தாயே, - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே
3. சுத்தாங்கத்து நற்சபையே, - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்
4. தூரம்திரிந்த சியோனே, - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்திலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டியாக்கினது என்னை!

கருத்துகள் இல்லை: