திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - சேனையதிபன் நம் கர்த்தருக்கே


1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பருக்கே
அதை அறிந்தே அகமகிழ்வோம் - 2
ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே
2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே - (2)
3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் - (2)
4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே
துதி சாற்றி ஆர்ப்பரிப்போம் - துதிப்பேன்
5. கறை திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் – (2)

கருத்துகள் இல்லை: