1. சேனையதிபன்
நம் கர்த்தருக்கே
செலுத்துவோம்
கனமும் மகிமையுமே
அற்புதமே
தம் அன்பருக்கே
அதை
அறிந்தே அகமகிழ்வோம் - 2
ஜெய
கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக
நடத்திடுவார்
ஜெய
கீதங்கள் நாம் பாடியே
ஜெய
கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம்
அல்லேலூயா அவர் நாமத்திற்கே
2. தாய்
மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய்
விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத்
தேற்றுகிறார்
என்றும்
வாக்கு மாறிடாரே - (2)
3. மேய்ப்பனில்லாத
ஆடுகட்கே
நானே
நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச்
சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப்
பாதைக் காட்டிடுவார் - (2)
4. சத்துருவின்
கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம்
நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின்
சேனை நடுங்கிடவே
துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் - துதிப்பேன்
5. கறை
திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர்
நம்மைக் கழுவிடுவார்
வருகையில்
எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல்
காத்துக் கொள்வார் – (2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக