சனி, 12 அக்டோபர், 2013

Praising Songs - நன்றியால் துதிபாடு நம் இயேசுவை

நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
  இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
  கலங்கிடாதே திகைத்திடாதே
  துதியினால் இடிந்து விழும் - நன்றி

2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
  தெய்வ பயத்தோடு என்றுமே
  ஆவியினால் என்றும் நிறைந்தே
  சங்கீத கீர்த்தனம் பாடு நன்றி

3. சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
  சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்
  துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
  தூயரின் பெலன் கிடைக்கும் - நன்றி

கருத்துகள் இல்லை: