நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன்
முன்னே செல்கிறார்
கலங்கிடாதே
திகைத்திடாதே
துதியினால்
இடிந்து விழும் - நன்றி
2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி
கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு
என்றுமே
ஆவியினால் என்றும்
நிறைந்தே
சங்கீத கீர்த்தனம்
பாடு – நன்றி
3. சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
சோர்ந்து போகும்
வேளையிலெல்லாம்
துதி சத்தத்தால்
உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன்
கிடைக்கும் - நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக