ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து, - இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து
சரணங்கள்
1. போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத - ஆத்
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான - ஆத்
4. வாதை, நோய், துன்பம் மாற்றி,
அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்
5. உற்றுனக் கிரங்கி உரிமைப் பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
– ஆத்
6. துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே,
இதயமே உள்ளமே, என் மனமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக