புதன், 25 செப்டம்பர், 2013

Tamil Praising Songs - கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்.

                அனுபல்லவி
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் - கண்

                சரணங்கள்
1. காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
  காலைத் தள்ளாட வொட்டார்
  வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
  காலையும் மாலையும் கண்ணுறங்காதவர் - கண்

2. பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
  பக்க நிழல் அவரே,
  எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
  அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே - கண்

3. எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
  எல்லாத் தீமைகட்கும்,
  பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
  நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண்

கருத்துகள் இல்லை: