பாடித் துதி மனமே, பரனைக் கொண்
படித் துதி தினமே.
அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - பாடி
சரணங்கள்
1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து
தியானித்துப் - பாடி
2. சொந்த ஜனமான யுதரைத் தள்ளித்
தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன்
தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் -
பாடி
3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப்
- பாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக