புதன், 25 செப்டம்பர், 2013

Tamil Praising Songs - பாடித் துதி மனமே, பரனைக் கொண்

பாடித் துதி மனமே, பரனைக் கொண்
படித் துதி தினமே.

            அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - பாடி

            சரணங்கள்
1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
  செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
  மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
  விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் - பாடி

2. சொந்த ஜனமான யுதரைத் தள்ளித்
  தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
  மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
  மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் - பாடி

3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
  எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
  எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
  இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் - பாடி

கருத்துகள் இல்லை: