இவரே
பெருமான்,மற்றப்
பேர்
அலவே பூமான், - இவரே பெருமான்.
1. கவலைக்
கிடங்கொடுத் தறியார், - வேறு
பவவினை
யாதுமே தெரியார், - இப்
புவனமீது
நமக்குரியார் - இவரே
2. குருடர்களுக்
குதவும் விழியாம், - பவக்
கரும
இருளை நீக்கும் ஒளியாம், - தெய்வம்
இருக்குந்
தலஞ்செல் வாசல் வழியாம் - இவரே
3. பலபிணி
தீர்க்கும் பரிகாரி, - சொல்லும்
வல்லமையில்
மிக்க விபகாரி, - எக்
குலத்துக்கும்
நல்ல உபகாரி - இவரே
4. அறஞ்
செய்வதினில் ஒரு சித்தன், - கொடு
மறம்விடு
பவர்க்கருள் முத்தன், - இங்கே
இறந்தோர்க்
குயிரீயும் கர்த்தன் - இவரே
4. பொன்னுலகந்
தனில்வாழ் யோகன், - அருள்
துன்ன
உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை
யளித்த ஓர் தியாகன் - இவரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக