ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - இவரே பெருமான்


இவரே பெருமான்,மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.
1. கவலைக் கிடங்கொடுத் தறியார், - வேறு
பவவினை யாதுமே தெரியார், - இப்
புவனமீது நமக்குரியார் - இவரே
2. குருடர்களுக் குதவும் விழியாம், - பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம், - தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம் - இவரே
3. பலபிணி தீர்க்கும் பரிகாரி, - சொல்லும்
வல்லமையில் மிக்க விபகாரி, - எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி - இவரே
4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன், - கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன், - இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் - இவரே
4. பொன்னுலகந் தனில்வாழ் யோகன், - அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் - இவரே

கருத்துகள் இல்லை: