புதுவாழ்வு
தந்தவரே
புது
துவக்கம் தந்தவரே (2)
நன்றி
உமக்கு நன்றி
முழு
மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி
உமக்கு நன்றி
மனநிறைவுடன்
சொல்லுகின்றோம் (2)
1. பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே
– உம் (2)
குறைவுகளை
கிறிஸ்துவுக்குள்
மகிமையில்
நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு
– நன்றி…
2. முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை
சிந்திக்காமல் (2)
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை
சிங்காரமாக்கிவிட்டீர் (2)
அதற்கு
– நன்றி…
3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு
அறுக்கச் செய்தீர் (2)
ஏந்தி
நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும்
கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
அதற்கு
– நன்றி…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக