திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - பொங்கி வரும் அருள் மனிதரை


பொங்கி வரும் அருள் மனிதரை
மாற்றிடுதே – மங்கிப் போன மனம்
புதுவாழ்வில் மலர்ந்திடுதே
1. தீயவர் திருடரும்,கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் நம்பி நீ ஓடியே வா
2. தேவனின் ஆவியால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா ராஜன் உன்னைத்தான்
அழைக்கிறார் நம்பி நீ ஓடியே வா
3. கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட
வேண்டாம் நீ அழைக்கிறார் ஓடியே வா

கருத்துகள் இல்லை: