திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே


உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன்
இயேசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
1. பரிசுத்தமே பரவசமே
பரனே அருளே வரம்பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்
2. புது எண்ணெயால் புது பெலத்தால்
புதிய கிருபை புதுக் கவியால்
நிரம்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலெமில் சேர்த்திடுவீர்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர்
4. என் முன் செல்லும் உம் சமுகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே
5. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன்

கருத்துகள் இல்லை: