திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - திருப்பாதம் நம்பி வந்தேன்


திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே
1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் - திருப்பாதம்
2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோ டென்னை நோக்கிடுமே - திருப்பாதம்
3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடுமே
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்        -திருப்பாதம்
4. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீர பாதை காட்டினீரே
வளர்ந்து கனி தரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன் – திருப்பாதம்

கருத்துகள் இல்லை: