திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - நான் உன்னை விட்டு விலகுவதில்லை


நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்
1. பயப்படாதே நீ மனமே
நான் காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
2. திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைத் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் – நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

கருத்துகள் இல்லை: