பாதம்
ஒன்றே வேண்டும்-இந்தப்
பாரில்
எனக்கு மற்றேதும் வேண்டாம்- உன்
1. நாதனே
தூங்க மெய் வேதனே பொங்கு நற்
காதலுடன் துய்ய தூதர்
தொழுஞ் – செய்யும்
2. சீறும்
புயலினால் வாரிதி பொங்கிட
பாரில் நடந்தாற் போல்
– நீர் மேல் நடந்த - உன்
3. வீசும்
கமழ் கொண்ட – வாசனை தைலத்தை
ஆசையுடன் மரி பூசிப்
பணிந்த பொற்
4. போக்கிடமற்ற
எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரம் தூக்கி
நடந்த – பொற்
5. நானிலத்தோர்
உயர்வான்நிலத்தேற - வல்
ஆணி துளைத்திடத் தானே
கொடுத்த - உன்
6. பாதம்
அடைந்தவர்க் காதரவாய் பிர
சாதம் அருள் இயேசு நாதனே
என்றும் – உன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக