நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை (2)
நான் உன்னை காண்கிற தேவன்
கண்மனிபோல் உன்னை காப்பேன் (2)
1. பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே (2)
அற்புதங்கள் நான் செய்திடுவேன் (2) -உன்னை
அதிசயமாய் நான் நடத்திடுவேன் (2)
2. திகையாதே கலங்காதே மனமே - நான்
உன்னுடன் இருக்க பயம் ஏன் (2)
கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவேன் (2)
-உன்
கவலைகள் யாவையும் தீர்த்திடுவேன் (2)
3. அனுதினம் என்னை தேடிடுவாய் - நான்
அளித்திடும் பலனை பெற்றிடுவாய் (2)
அத்தி மரம்போல் செழித்திடுவாய் (2) -
நான்
ஆசையாய் உண்ண கனிகொடுப்பாய் (2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக