தந்தேன்
என்னை இயேசுவே
இந்த நேரமே
உமக்கே.
உந்தனுக்கே
ஊழியஞசெய்யத்
தந்தேன்
என்னைத் தாங்கியருளும்.
1. ஜீவகாலம் முழுதும்
தேவபணி
செய்திடுவேன்,
பூவில்
கடும்போர் புரிகையில்
காவும்
உந்தங் கரத்தினில் வைத்து – தந்தேன்
2. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன்
உம்மில் அமரச்செய்திடும் – தந்தேன்
3. ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று
சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே
அடியேனை நிரப்பும் - தந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக