திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - தாசரே,இத்தரணியை அன்பாய்


தாசரே,இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்,அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம் - தாசரே
1. வருத்தப்பட்டு பாரஞ்சுமந்தோரை,
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்,
உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை,
நமது துக்கத்தை,நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே
2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம் ;
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து,
இயேசு கனிந்து,திரிந்தனரே - தாசரே
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை,
நீசரை நாம் உயர்த்திடுவோம் ;
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்,
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே
4. இந்தியதேச மாது சிரோமணிகள்
விந்தை யொளிக்குள் வரவழைப்போம் ;
சுந்தர குணங்களடைந்து, அறிவிலுயர்ந்து,
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து, சிறந்திலங்கிட – தாசரே
5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்;
ஊக்கமாக ஜெபித்திடுவோம்,நாமுயன்றிடுவோம்,
நாம் உழைத்திடுவோம்,நாம் ஜெயித்திடுவோம் – தாசரே

கருத்துகள் இல்லை: