தாசரே,இத்தரணியை
அன்பாய்
இயேசுவுக்குச்
சொந்தமாக்குவோம்
நேசமாய்
இயேசுவைக் கூறுவோம்,அவரைக்
காண்பிப்போம்,
மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம்
வீசுவோம் - தாசரே
1. வருத்தப்பட்டு
பாரஞ்சுமந்தோரை,
வருந்தியன்பாய்
அழைத்திடுவோம்,
உரித்தாய்
இயேசு பாவப் பாரத்தை,
நமது
துக்கத்தை,நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே
2. பசியுற்றோர்க்குப்
பிணியாளிகட்குப்
பட்சமாக
உதவி செய்வோம் ;
உசித
நன்மைகள் நிறைந்து தமை மறந்து,
இயேசு
கனிந்து,திரிந்தனரே - தாசரே
3. நெருக்கப்பட்டு
ஒடுக்கப்பட்டோரை,
நீசரை
நாம் உயர்த்திடுவோம் ;
பொறுக்கவொண்ணா
கஷ்டத்துக்குள்,
நிஷ்டூரத்துக்குள்,
படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே
4. இந்தியதேச
மாது சிரோமணிகள்
விந்தை
யொளிக்குள் வரவழைப்போம் ;
சுந்தர
குணங்களடைந்து, அறிவிலுயர்ந்து,
நிர்ப்பந்தங்கள்
தீர்ந்து, சிறந்திலங்கிட – தாசரே
5. மார்க்கம்
தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள்
வந்திடச் சேர்த்திடுவோம்;
ஊக்கமாக
ஜெபித்திடுவோம்,நாமுயன்றிடுவோம்,
நாம்
உழைத்திடுவோம்,நாம் ஜெயித்திடுவோம் – தாசரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக