பல்லவி
தொழுகிறோம்
எங்கள் பிதாவே
பொழுதெல்லாம்
ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த
அலங்காரத்துடனே
தரிசிப்பதினால்
சரணம்,சரணம்
1. வெண்மையும்
சிவப்புமானவர்
உண்மையே
உருவாய் கொண்டவர்
என்னையே
மீட்டுக் கொண்டவர்
அன்னையே
இதோ சரணம் சரணம் - தொழு
2. தலை
தங்க மயமானவர்
தலை
மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம்
பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம்
சரணம் சரணம் - தொழு
3. கண்கள்
புறாக் கண்கள் போல
கன்னங்கள்
பாத்திகள் போல
சின்னங்களும்
சிறந்ததாலே
எண்ணில்லாத
சரணம் சரணம் - தொழு
4. கரங்கள்
பொன் வளையங்கள் போல
நிறங்கள்
தந்தத்தைப் போல
கால்களும்
கல் தூண்கள் போல
காண்பதாலே
சரணம் சரணம் - தொழு
5. பார்த்திபனே கன தோத்திரம்
கிர்த்தனம்
மங்கள தோத்திரம்
வாழ்க
வாழ்க வாழ்க என்றும்
அல்லேலுயா
ஆமேன் ஆமேன் - தொழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக