மனம்
இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய்
தினம்
வாழ்வது சிறப்பானது!
நன்மையானது
இன்பமானது
மண்வாழ்வினில்
பேரழகு!
1. அது
- ஆரோனின் தலைமீது பொழிந்து
அவனது
தாடியில் வழிந்து
அங்கியில்
குழைந்து தொங்கலில் இழைந்து
கீழ்
வடிந்திடும் பரிமளம் போன்றது!
2. அது
- எர்மோனின் மலையதன் மேலும்
சீயோனின்
சிகரங்கள் மீதும்
மெல்லெனக்
கவிந்து சில்லெனக் குவிந்து
தினம்
படர்ந்திடும் பனியினைப் போன்றது!
3. இன்று
- இனம்மொழி பொருள்நிலை கொண்டு
எத்தனை
பிரிவுகள் உண்டு?
அன்பினில்
பகிர்ந்துஇன்பமாய் இணைந்து
ஒன்றாய்
இணைந்து வாழ்வதே அருளரசு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக