என்றும்
ஆனந்தம்
என்
இயேசு தருகிறார்
அனுபல்லவி
துதிப்பேன்
துதிப்பேன்
துதித்துக்
கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா
ஆனந்தமே (2)
1. உன்னதர்
மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை
நோக்கி அடைக்கலப் பாறை
என்றே
சொல்லுவேன் - துதிப்பேன்
2. தமது
சிறகால் என்னை மூடி
காத்து
நடத்துவார்
அவரது
வசனம் ஆவியின் பட்டயம்
எனது
கேடகம் - துதிப்பேன்
3. வழிகளிலெல்லாம்
என்னைக் காக்க
தூதர்கள்
எனக்குண்டு
பாதம்
கல்லில் மோதாமல் காத்து
கரங்களில்
ஏந்துவார் - துதிப்பேன்
4. தேவனைச்
சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும்
விடுதலை
அவரது
நாமம் அறிந்த எனக்கு
அவரே
அடைக்கலம் - துதிப்பேன்
5. ஆபத்து
நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும்
பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை
கொடுத்து
என்னை
உயர்த்துவார் - துதிப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக