திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - காக்கும் கரங்கள் உண்டெனக்கு


1. காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலுயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை
2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசர் கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்
3. அத்திமரம் துளிர் விடாமல்
ஆட்டு மந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை
4. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்
நம்புவேன் இயேசுவை (2)

கருத்துகள் இல்லை: