திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - குயவனே குயவனே


குயவனே குயவனே
படைப்பின் காரணரே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால்
உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மை போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே
3. மண்ணாசையில்நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கில் பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணமற்போன பாத்திரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே

கருத்துகள் இல்லை: