விந்தைக்
கிறிஸ்தேசு ராசா!
உந்தன்
சிலுவை என் மேன்மை.
சுந்தரம்
மிகும் இந்தப் பூவில்
எந்த
மேன்மைகள் எனக்கிருப்பினும்.
1. திரண்ட
ஆஸ்தி,உயர்ந்த கல்வி,
செல்வாக்குகள்
மிக விருப்பினும்,
குருசை
நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய
பெருமை யாவும் அற்பமே. - விந்தை
2. உம்
குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம்
வற்றா ஜீவ நதியாம்
துங்க
இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து
மேன்மையாகினேன். - விந்தை
3. சென்னி,விலா,கை,கானின்று
சிந்துததோ!
துயரோடன்பு:
மன்னா,இதைப்
போன்ற காட்சி
எந்நாளிலுமே
எங்கும் காணேன். -விந்தை
4. இந்த
விந்தை அன்புக் கீடாய்
என்ன
காணிக்கை ஈந்திடுவேன்
எந்த
அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். – விந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக