திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - விந்தைக் கிறிஸ்தேசு ராசா!

விந்தைக் கிறிஸ்தேசு ராசா!
உந்தன் சிலுவை என் மேன்மை.
சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்.
1. திரண்ட ஆஸ்தி,உயர்ந்த கல்வி,
செல்வாக்குகள் மிக விருப்பினும்,
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே. - விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து மேன்மையாகினேன். - விந்தை
3. சென்னி,விலா,கை,கானின்று
சிந்துததோ! துயரோடன்பு:
மன்னா,இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன். -விந்தை
4. இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். – விந்தை

கருத்துகள் இல்லை: