சிலுவையின்
நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்
பாறிடுவேன் - ஆ.ஆ
1. பாவப்பார சுமையதால் சோர்ந்தே
தளர்ந்ததென்
ஜீவியமே - ஆ.ஆ
சிலுவையண்டை
வந்ததினால்
சிறந்த
சந்தோஷம் கண்டதினால்
இளைப்படையாது
மேலோகம்
ஏகுவேன்
பறந்தே வேகம்
2. எவ்வித
கொடிய இடருக்கும் அஞ்சேன்
இயேசுவைக்
சார்ந்து நிற்பேன் - ஆ.ஆ
அவனியில்
வியாகுலம் வந்தால்
அவரையே
நான் அண்டிக் கொண்டால்
அலைமிக
மோதிடும் அந்நாள்
ஆறுதல்
அளிப்பதாய்ச் சொன்னார்.
3. இன்பஞ்
சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள்
மறந்திடுவேன் - ஆ.ஆ
திருமறை
இன்னிசை நாதம்
தேனிலுமினிய
வேதம்
தருமெனக்கனந்த
சந்தோஷம்
திர்க்குமென் இதயத்தின் தோஷம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக