ஜெயம்
கொடுக்கும் தேவனுக்கு
கோடி
கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும்
இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம்
ஸ்தோத்திரம்
அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த
தொனியால் உயர்த்துவேன்(2) - ஜெயம்
சரணங்கள்
1. நீதியின்
கரத்தினால் தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்குமே
அஞ்சிடேன் - ஜெயம்
2. அற்புதம்
செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார் - ஜெயம்
3. நம்பிக்கை
தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் - ஜெயம்
4. உண்மை
தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பவர் உறங்குவதில்லையே
- ஜெயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக