எந்தன்
ஜெப வேளை உம்மைத் தேடி வந்தேன்
தேவா
பதில் தாருமே
எந்தன்
கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை
நான் நாடி வந்தேன்.
1. சோராது
ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடை
யாவும் அகற்றிடுமே
தயை
வேண்டி உம் பாதம் வந்தேன் - எந்தன்
2. உம்மோடு எந்நாளும்
உறவாட
அருள் செய்யுமே
கர்த்தாவே
உம் வார்த்தையை
கேட்டிட
காத்திருப்பேனே - எந்தன்
3. நம்பிக்கை
இல்லாமல்
அலைகின்ற
மாந்தர்தனை
மீட்டிடும்
என் இயேசுவே
போராடி
ஜெபிக்கிறேன் நாதா - எந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக