புதன், 16 அக்டோபர், 2013

Praising Songs - ஆயிரம் ஆயிரம் பாடல்களை

ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே
யாவரும் தேன்மொழி பாடல்களால்
இயேசுவை பாடிட வாருங்களேன் (2)

                            பல்லவி
அல்லேலூயா! அல்லேலூயா!
என்றெல்லோரும் பாடிடுவோம்
அல்லல் இல்லை அல்லல் இல்லை
ஆனந்தமாய் பாடிடுவோம்.

1. புதிய புதிய பாடல்களை
  புனைந்தே பண்களும் சேருங்களே
  துதிகள் நிறைந்த கானங்களால்
  தொழுதே இறைவனை காணுங்களே - அல்லேலூயா

2. நெஞ்சின் நாவின் நாதங்களே
  நன்றி கூறும் கீதங்களாம்
  மிஞ்சும் ஓசை தாளங்களால்
  மேலும் பரவசம் பாடுங்களே - அல்லேலூயா

3. எந்த நாளும் காலங்களும்
  இறைவனை போற்றும் நேரங்களே
  சிந்தை குளிர்ந்த ஆண்டுகளாய்
  சீயோனின் கீதம் பாடுங்களே - அல்லேலூயா

கருத்துகள் இல்லை: