மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம்
- நாம்
ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்
வாழ்க,
வாழ்க, வாழ்க என்று
வாழ்த்திப்பாடுவோம்
1.
வானத்தில் பறந்திடும் பறவைகளாய்
விண்ணினில்
பூத்திடும் விண் மீன்களாய்
என்றும் ஜொலித்து என்றும்
பறந்து
சந்தோஷமாய்
வாழ்ந்திட கீதம் பாடுவோம் - மலர்
2.
ஆவியின் கனிகளால் நிறைந்திடவே
அன்பின் வழிதனில்
நடந்திடவே
அல்லும் பகலும்
ஜெபம் செய்திட
ஆண்டவரை நாமும்
வேண்டிடுவோம் - மலர்
3.
செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே
நன்மைகள் தினமும்
நாடி வரவே
மீட்பர் பாதத்தில்
நன்றி கூறியே
நல்லவரை வல்லவரை
என்றும் துதிப்போம் - மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக