நீரின்றி
வாழ்வேது இறைவா - உம்
நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்தபோதும்
உம் இல்லத்தில் வாழும் ஒருநாளே போதும்
1. பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை
போதும்
ஓர் ஆயிரம் ஜீவன் உயிர்வாழுமே
- உம்
வார்த்தையில் உண்டு அற்புதமே
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர் வாழ
முடியாதய்யா
3. எத்தனை நன்மைகள் செய்தீரய்யா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி
துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்லவேண்டுமென்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதய்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக