புதன், 16 அக்டோபர், 2013

Christpas Songs - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து



               பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.

             சரணங்கள்
1. நமதாதி பிதாவின் திருப் பாலர் இவர்
  அனுகூலர் இவர், மனுவேலர் இவர் - சமா
2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
  பரம ராயர் இவர், நம தாயர் இவர் - சமா
3.ஆதி நரர் செய்த தீதறவே
  அருளானந்தமாய் அடியார்; சொந்தமாய் - சமா
4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
  அறிஞோர் தேடவே ஆயரும் கூடவே - சமா
5.மெய்யாகவே மேசியாவுமே
  நம்மை நாடினாரே கிருபை கூறினாரே - சமா

கருத்துகள் இல்லை: